ஓம் என்ற பிரணாயமம் செய்யும் போது ஓ என்ற எழுத்தினை உச்சரிக்கும் போது இதயம்,நுரையீரல் துவங்கி ஒலி புறப்படவேண்டுமாம்.'ம்' என்ற ஒலி எழுப்பும் போது கண்,மூக்கு,தொண்டையில் ஒலி அதிர்வுகள் ஏற்படவேண்டுமாம். அதிர்வுகளின் மூலமாக காது,மூக்கு,தொண்டை போன்ற பகுதிகளில் உருவாகும் நோய்களை குணப்படுத்த ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் ஒரு மருத்துவமனை இயங்குகிறதாம்.உலகின் பல பகுதிகளிலிருந்தும் பல மருத்துவர்கள் வந்து பாடம் கற்றுச் சென்று தங்கள் நாட்டில் இந்த ஒலி மருத்துவத்தை பரப்புகிறார்கள்.(குறட்டைக்காக விவாகரத்து வரை வந்து விடுவதால் இந்த மருத்துவத்தை மேலைநாடுகள் அலட்சியப்படுத்தி விடமுடியாது).
அதே மாதிரி தமிழ்நாட்டிலிருந்தும் ஒரு ENT மருத்துவ நிபுணர் இதனைக் கற்றுக் கொள்ள சென்றுள்ளார்.ஹங்கேரியில் சொல்லிக் கொடுத்த பாடம் இரு உதடுகளையும் இணைத்து "ப்" என்ற ஒலி வரவும் உதடுகள் இரண்டும் அதிரும்படியும் ஒலி எழுப்புவது.மருத்துவ நிபுணர் இந்த ஒலி மருத்துவத்தை எல்லா நாட்டிற்கும் சொல்லிக் கொடுக்கிறீர்களா என்ற கேட்டதற்கு இந்தப் பாடமே எல்லா நாட்டு வருகையாளர்களுக்கும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்ற பதில் வந்ததாம்.
மருத்துவ நிபுணர் மிகவும் ஆச்சரியப்பட்டு இந்த ஒலி மருத்துவம் நம்ம கிராமத்துப் பசங்க பனங்காய்களை சக்கரமாகக் கட்டிக்கொண்டு உதட்டைப் பிதுக்கிக் கொண்டு ப்..ப்..ர்..ர்.ர் என்று பனங்காய் வண்டி ஓட்டும் மருத்துவமாச்சே என்று ஆச்சரியப்பட்டுப் போனார்.இதில் இன்னொரு ஆச்சரியப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் உலகம் முழுதும் பள்ளிப்பருவ குழந்தைகள் இந்த ஒலியை இயற்கையாகவே கையாளுகிறார்களாம்.(வளைகுடா குழந்தைகள் பள்ளி நேரம் போக,வார இறுதி நாட்கள் தவிர கூட்டில் அடைத்த கோழிகளாய்த்தான் வளர்கிறார்கள்)எனக்கும் நண்பர்களுக்கும் பனங்காய் கிடைக்காததால் ஆமணக்கு மர விசிறிப் பட்டம் மட்டுமே விட்டு டுர்ன்னு வண்டி ஒட்டிய பழைய நினைவுகள் திரும்புகின்றது.
நேச்சுராபதி மருத்துவம் அதிகம் உண்டதாலோ என்னவோ சில சமயம் பாலைவனமெல்லாம் கோபப்பட்டுகிட்டு சகாராப் பாலைவனம் மாதிரி,இல்ல...இல்ல... நம்ம ஊர் கதாநாயகன்,நாயகி கட்டிப் புரளும் ராஜஸ்தான் பாலைவன மண்ணு,தூசியெல்லாம் ஒரேயடியா கோபிச்சிகிட்டு மனுசங்கூட சண்டைக்கு வந்தா எப்படியிருக்குமோ அந்தமாதிரி பாலைதேசத்து மண்தூசிகள் மூக்கைத் துளைத்தாலும் முகமூடியெல்லாம் போடாம அன்றைய தேச இயற்கை மருத்துவம் இன்று வரை தூசர்களிடமிருந்து காக்கிறது.
பனம்பழமே,ஆமணக்கே,வேரில் மணக்கும் மஞ்சளே இன்னும் கண்ணுக்கு முன்னால் வலம் வரும் தேவமருந்துகளே வாழ்க!வாழ்க!கூடவே உச்சரிக்க மறந்த ஓம் என்ற மந்திரமும்.
Wednesday, July 8, 2009
ஓம் என்ற மந்திரமும் ஹங்கேரி நாட்டு மருத்துவமும்.
Posted by
ராஜ நடராஜன்
at
4:04 PM
Links to this post
13
comments
Labels: இயற்கை மருத்துவம்
Wednesday, June 10, 2009
பத்திரிகை ஆசிரியர் அய்யநாதன்
எத்தனை நாட்களுக்குத்தான் கருணாநிதி,ஜெயலலிதா,வைகோ,ராமதாஸ்ன்னே பேசுக்கொண்டு இருப்பது?மாறுதலுக்காக சில தமிழ் அறிவுஜீவிகளையும் முன்னிலைப் படுத்துவோம்.
பத்திரிகையாசிரியர் அய்யநாதனை முதலில் பார்த்தது மக்கள் தொலைக்காட்சியின் பார்வைகள் என்ற நிகழ்ச்சியின் மூலமாக.நிகழ்ச்சி தொகுப்பாளர் முத்துக்குமாரின் கேள்விக்கு நல்ல விளக்கங்களோடு பார்ப்பவரை சொல்வது சரிதான் என நினைக்கவைக்கும் அன்றாட பொது நிகழ்வுகளின் தொகுப்பே பார்வைகள் நிகழ்ச்சியாகும்.இதற்கு எத்தனை பார்வையாளர்கள் என்பது மக்கள் தொலைக்காட்சிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.ஆனால் உலகநிகழ்வுகளின் அலசலுக்கு ஒரு சிறந்த உரையாடல் இது.
இவரும் இணையம் சார்ந்தவர் (தமிழ் வெப்துனியா)என்பதாலோ என்னவோ இணையங்களில் அடிபடும் பொதுக்கருத்துக்களும் இவரது பேச்சில் அடிபடும்.போருக்குப் பின் சோர்ந்து போய் இருந்த ஈழ உணர்வை கணினி தொழில் நுட்பம் சார்ந்தவர்களோடு இணைந்து நிகழ்த்திய அமைதிப் போராட்டம் விரக்தியான மனநிலையில் இருந்தவர்களுக்கு மீண்டும் ஈழத்தமிழர்களுக்கு தமிழன் என்ற முறையில் என்பதை விட மனிதாபிமானம் உள்ளவர்கள் என்ற நிலையிலிருந்து ஏதாவது நல்லது செய்து விட முடியாதா என்ற உணர்வை மீண்டும் வெளியே கொண்டு வந்திருக்கிறது.
தமிழ் உணர்வு கொண்ட அரசியல்வாதிகளை பின்னுக்கு உட்கார வைத்து ஆலோசனைகளை மட்டும் கேட்டுக் கொண்டு இப்படி தொழில் நுட்பம் சார்ந்தவர்கள்,மாணவர்கள் என அணி திரண்டு ஏனைய பல்துறைகளிலும் இருப்பவர்களை துணைக்கழைத்துக் கொண்டு விவேகமான முறையில் கல்லெறிதல்,தீவைத்தல்,பஸ் எரிப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடக்கா வண்ணம் அமைதி முறையில் உலகத்தின் கண்களுக்கு இந்தப் போராட்டம் முடியவில்லை என்பதை கண்முன் நிறுத்துவது அவசியம்.
இந்தக் கலவரங்கள் பற்றிச் சொல்லும் போது கூட்டம் கூடுமிடத்தில் தான் பலசாலி என்ற உணர்வு ஒரு தனி மனிதனுக்கு வருவதுடன் கலவரத்தின் தாக்கங்கள் என்னவென்று தெரியாமலும் சிலர் கல்வரங்களைத் தூண்டுவதுண்டு.இன்னுமொரு கோணத்தில் பார்த்தால் கூட்டத்தில் கலவரங்கள் நிகழ்வதற்கு முக்கியமான காரணி காவல்துறை.காவல்துறைன்னு சொன்னவுடன் நம்ம ஊர் காவல்துறை மட்டும் என்ற கணிப்புக்கு யாரும் வந்து விடவேண்டாம்.உலகளாவிய காவல்துறையினரே போராட்டங்களில் கலவரம் வெடிப்பதற்கு முதல் நிலையில் இருப்பார்கள் என்று ஒரு விவாதக் களத்தில் கேட்டது.காவல்துறை சார்ந்தவர்களின் கருத்து இதற்கு மாறுபட்டும் கூட இருக்கலாம்.இன்னுமொரு நிலையில் காவல்துறையை நோக்கினால் இவர்களுக்கு வேலைப்பணியின் நேரம்,மனஅழுத்தங்கள், மேலிடத்து அழுத்தங்கள் அதிகம்.எனவே இதன் காரணம் கொண்டும் கூட்டத்தின் வலுவுக்கு ஏற்றாற்போல் பிரச்சினையை ஊதிவிடும் சாத்தியங்கள் உண்டு.இவைகளையும் அடுத்து ஒரு கலவரக் கலாச்சாரத்தை தமிழகம் கற்று வைத்திருக்கிறது.அது என்னவென்றால் எதிர்க்கட்சி சார்ந்த அணிவகுப்பா அடியாட்களுக்கு காசு கொடுத்து கலாட்டாவை உருவாக்குவது.அப்புறம் பழியை அணிவகுப்பு நடத்தினவர்கள் மேலேயே போட்டு விடுவது என்ற குறுக்குப்புத்தித்தனம்.முன்பு பொராட்டா,கள்ளச்சாராயம்ன்னு மட்டும் கட்சி சார்பா வளர்ந்த கலாச்சாரம் இப்ப எங்க வந்து நிற்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.இப்படி வளர்ந்த எதிர்விளைவுகள் இப்பொழுது கட்சிகளின் ஒரு அங்கீகரகமாக மாறிவிட்டது.எனவே இவைகளையெல்லாம் சமாளித்து வரும் ஆற்றலை அணிவகுப்பாளர்களின் பொறுப்பாளிகள் கவனிப்பது அவசியம்.உலகம் தொழில் நுட்பம்,காணொளி,செல்போனில் காமிரா என்று மிகவும் வளர்ந்து வருகிறது.எனவே இந்தக் கலாச்சாரங்களின் முகமூடிகளை கிளித்தெறிய வேண்டியது அணி வகுப்பாளர்களின் பொறுப்பாகும்.
கார்கில் யுத்த காலத்தில் கே.சுப்ரமணியம் என்ற பாதுகாப்பு ஆலோசகர் இருந்தார்.CNN போன்ற விவாதக் களங்களில் பாகிஸ்தானுக்கு எதிர்க்கேள்வி கணை விடுப்பதில் வல்லவர்.அந்த மாதிரி உள்ளூர் தொலைக்காட்சி ஊடகமான வின் தொலைக்காட்சியில் நிகழும் விவாதத்திற்கும் பத்திரிகை ஆசிரியர் உலகநாதன் கருத்துக்கள் ஆழமானவையாக இருக்கும்.அவருடைய சமூக உணர்வுக்கும் கீழே உள்ள படத்தை பிரசுரிக்க அனுமதிக்கவும்,இந்த இடுகைக்கான தூண்டுதலாகவும் இருந்த கரையோரம் தளத்தின் பதிவர் செல்லமுத்து குப்புசாமிக்கும்,அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட தொழில் நுட்ப வட்டத்து சகோதர சகோதரிகளுக்கும் இந்த இடுகை தன் புன்முறுவலை சமர்ப்பணம் செய்கிறது.
கரையோரம் தளத்தின் முழுப் படங்களுக்கு
http://karaiyoram.blogspot.com/2009/06/blog-post.html
Posted by
ராஜ நடராஜன்
at
6:27 PM
Links to this post
19
comments
Labels: வெப்துனியா
Monday, June 8, 2009
தமிழ் தொலைக்காட்சிகள் ஓர் பார்வை-பகுதி 2
சென்ற இடுகை போதுமென்று கை கட்டளையிட்டு விட்டதால் மூளையின் அங்கீகாரமில்லாமல் சார் போஸ்ட் சொல்லி விட்டது.சொல்ல வந்த கருத்து முற்றுப்பெறாத மாதிரி தோன்றிய காரணத்தால் பகுதி 2 தொடர்கிறது.
வாழ்வின் பல குழப்பமான விசயங்களில் தினமும் முக்கியமாக வேலை,தொழில் என்ற பணம் தேடுதலில் சிக்கித் தவிக்கும் காரணத்தாலும்,இளமை,கல்லூரிக்காலம்,வீட்டு நிர்வாகம்,பள்ளி செல்லுவது,பயணம் என்ற பல நிலைகளில் அனைவரும் வலம் வருவதாலும் அக்கடா என்று வீட்டில் அமரும் சமயம் கணினியை விட தொலைக்காட்சி அனைவருக்கும் எளிதான நுகர்வோர் பொருளாகி விடுகிறது.
இனி இணையம் என்ற பெருங்கடலில் மீன் பிடிக்கச் சென்றால் அது பல வகை மீன்களை இனம் காட்டி எங்காவது ஒரு இடத்தில் வலையை வீசச் செய்கிறது.சில மானுட உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட காட்சிகள் வாழ்க்கையின் கோரத்தை தோலுரித்துக் காட்டவும் செய்கிறது.ஆனால் தொலைக்காட்சி என்பது சமைத்த பண்டம்.இங்கே இதுதான் கிடைக்கும்,வேணுமுன்னா வாங்கிட்டுப் போ கதைதான்.இந்த தனி உரிமையின் காரணம் கொண்டு எது கிடைக்கிறதோ அதனை நுகர வேண்டிய சூழல் நுகர்வோருக்கு.
ஆறு மாதங்களுக்கு மேலாக ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள் இணையத்தில் மிகத்தெளிவாகத் தெரிந்தும் அதனை மக்கள் பக்கம் கொண்டு செல்வதில் ஓரளவுக்கு மானிட உணர்வு கொண்டவர்கள் வெற்றியடைந்தும் கூட அன்றாட வாழ்வில் உழலும் மக்களுக்கு கொண்டு செல்ல முடியாத படி பங்கு வகித்ததில் தொலைக்காட்சிகளில் சன் குழுமத்திற்கு பெரும் பங்கு உண்டு.அதெப்படிங்க ஒரு நாள் முழுதும் சினிமா என்ற மயக்கத்திலேயே ஒரு தனி மனிதனை மூழ்கடிக்க முடிகிறது?இந்த மயக்கம் கூட தேர்தல் வெற்றியின் பணம்,ஓட்டுப் பிரித்தலுடன் ஒரு காரணியாக இருந்திருக்குமோ?டாஸ்மார்க் பார்ட்டிகள் கூட ராத்திரி அடிச்சா காலையில் தெளிந்து விடுகிறார்களே.ஆனால் தொலைக்காட்சி என்பது ஒரு ஊடகம் என்பதன் காரணம் கொண்டும் பகுத்தறிந்து சமூகத்தின் வெற்றி தோல்விகளின் முழுப் பொறுப்புக்கும் எதிர்கால வாழ்வின் உயர்வுக்கும் சறுக்கலுக்கும் மக்களே சொந்தக்காரர்களாகிறார்கள்.
எனவே தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்பிலிருந்து மீளும் மாற்று முகமாகவும் மாற்றுப் பார்வைக்கான சாத்தியங்கள் அதிகம் தென்படுவதாலும் இணையதளம் புழக்கம் அவசியம் தேவை.வரும் சட்டமன்ற தேர்தலில் கணினி இலவசம்(தனிப்பட்ட முறையில் இலவசம் என்பது நிராகரிக்கப்படவேண்டியது என்றாலும் கூட) என்ற அறிக்கையை ஜெயலலிதா மீண்டும் அறிவிக்கலாம்.அல்லது அதனையும் தன் உரிமைப் படுத்தும் நோக்கில் தி.மு.கவும் கூட முந்திக்கலாம்.எப்படியோ தொலைக்காட்சிக்கு மாற்றுதளம் அவசியம்.மாணவர்களுக்கும் கூட கணினி வழிப்பாடம் மிக எளிது.Flash drive போன்ற எளிய முறைகள் வீட்டுப்பாடங்களைக் வீட்டில் கற்கவும் மீண்டும் பள்ளியில் சமர்ப்பிக்கவும் எளிது.(By the way desktop computers are going to be obsolete.)அத்தனை நோட்டுப் புத்தகங்களையும் சுமக்க வேண்டிய அவசியம் இருக்காது நோட்டுப்புத்தக கணினிகளை உபயோகிக்கும் பட்சத்தில்.(மின்சாரமும்,கட்டணமும் என்ற தடங்கல்களையும் கடந்தாக வேண்டும்).
அதென்னமோ தெரியல எங்கே எண்ணங்களை அழைத்துச் சென்றாலும் இறுதியில் ஈழம் என்ற கோட்டில் வந்து மனம் நின்று விடுகிறது.எனவே தொலைக்காட்சியை விட்டு அரசியல் பக்கம் நோக்கினால் சட்டசபையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது வரை அனைத்துக் கட்சிகளின் பங்கு பாராட்ட வேண்டியதே.ஆனால் அதற்கு பின் துவங்கிய அரசியல் குளிர்ப்போரில் குளித்தவர்கள் அனைத்துக் கட்சிகளுமே.
எதிர்பார்க்காத பல நிகழ்வுகள் குறுகிய கால தினங்களில் நடைபெற்று விட்டது.தமிழகத்தில் யாருக்கும் இன்று வரை தெளிவான முடிவில்லா சூழல்.யாருக்கும் பூமிப் பந்தில் இந்தியாவின் தென்கோடியாய் தமிழ்நாட்டை நெம்பிப் போடும் சக்தி இல்லாமல் போய் விட்டது.யாருக்கு எவ்வளவு ஆன்மீக பலமும் லௌகீக பலமும் உள்ளது என்ற புரிதல் மட்டும் நம்மில் சிலருக்கு கிடைத்திருக்கிறது.முன்பு நெஞ்சை பகீர் கொள்ளச் செய்யும் இந்திய நிகழ்வுகள் இப்பொழுது மரத்துப் போய் மட்டுமே பார்வையாளனாக்கியிருக்கிறது.உதாரணத்திற்கு ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் நிலை.
எப்படியிருந்த போதிலும் மானாட மயிலாட,அசத்தப் போவது யாரு,உலக திரைப்படங்கள்,மெகா சீரியல்கள் என்ற மக்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள்,அன்றாட வாழ்க்கைப் பயணம் என அன்றாட நிகழ்வுகள் அப்படியே வலம் வருகின்றன.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாலும் சிலருக்கு வேலை வாய்ப்பும் வயிற்றுக்கும் சிறிது ஊட்டப்படுகிறது என்ற சந்தோசத்தோடு சிலரை மக்கள் முன் அறிமுகப்படுத்துகிறது என்ற சமாதானத்தோடு் தொலைக்காட்சிகளை மக்கள் காண்பது தவிர வேறு வழியில்லை.நானும் இந்தப் பெட்டியின் கதவை சாத்திக் கொண்டு தொலைக்காட்சியாளர்களின் தொழில் சிரமங்கள்,அரசியல் விளையாட்டுக்கள்,மூலதனம்,தொழில்நுட்ப பங்களிப்பு,நிகழ்ச்சிகளை உருவாக்குதல் போன்ற உயர் ரகசியங்கள் தெரியாது சொல்வதற்கு எல்லோருக்கும் எளிதாம் என்ற ஞானோதயத்திலும் ஊடகங்கள் சமுதாயத்திற்கு இன்னும் நிறைய பங்காற்ற இயலும் என்ற ஆற்றாமையிலும் நிறைவு செய்கிறேன்.
Posted by
ராஜ நடராஜன்
at
10:03 PM
Links to this post
21
comments
Labels: தொலைக்காட்சி
தமிழ் தொலைக்காட்சிகள் ஓர் பார்வை
தொலைக்காட்சிகள் மக்களின் மன இயல்பை,உளவியலை பிரதிபலிக்கக் கூடும்.பல தொலைக்காட்சிகள் தமிழகத்தில் வலம் வந்தாலும் சன் குழுமம் மட்டும் முன்னிலை வகிப்பதேன்?அரசியல் ஆதரவு இருந்தாலும் கூட கலைஞர் தொலைக்காட்சி வந்த பிறகும் தனது முதன்மையை தக்கவைத்துக் கொண்டதற்கு அதன் தொழில் அணுகுமுறையும் மக்களின் விருப்பம் எதுவென்று அறிந்து கொண்டு செயல்படுவது காரணமாக இருக்கக் கூடும்.
தனிப்பட்ட முறையில் ஈழம் குறித்த செய்திகளை கொண்டு செல்லாததும் வியாபார நோக்கிலே பயணம் செய்ததும் வருத்தத்தை உருவாக்கினாலும் சன் குழுமத்தை மட்டும் குறை சொல்ல இயலுமா என்ற கேள்வியை கேட்க வேண்டியதாக இருக்கிறது.காரணம்,சன் குழுமம் செய்யாததை செய்யத் தவறியதை மக்கள் தொலைக்காட்சி நிறையவே வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.ஆனால் ஈழ நிகழ்வுகள் என்ற ஒன்றை விடுத்தும்,தமிழ் என்ற சொல்லையும் விடுத்தும் ஏனையவை ஒரு தொலைகாட்சி பார்வையாளனை திருப்தி படுத்துமா என்ற கேள்வியும் எழுகிறது.
இன்னும் சொல்லப் போனால் இலங்கையில் மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டதும் தமிழகத்தில் அதற்கு சாதகமாகவே அமைந்திருக்க வேண்டும்.ஆனால் எதிர் விளம்பரத்தில் வியாபாரம் ஆகாததை யாரும் கவனிக்கவில்லை.ரஜனி எதிர்ப்பு என்ற காரணியும்,சினிமான்னாலே உவ்வே சொன்னதும் கூட மக்கள் தொலைக்காட்சி சிறப்படையாமல் போனதுக்கு காரணமாயிருக்கக் கூடும்.
கலைஞர் தொலைகாட்சி பக்கம் வந்தால் கட்டுமரக் கதையெல்லாம் இணையத்தில் மட்டுமே பவனி வரும் விசயம்.மானாட மயிலாட அடிச்சு ஆடுகிறது என்பது அதன் நடன அசைவுகளிலும்,வண்ண மயமான செட் அலங்கரிப்புகளிலும்,மற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்யத் துணியாத காட்சி அமைப்புகளிலும் தெரிகிறது.இணைய தள களத்தின் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் இயல்பிற்கும் தொலைக்காட்சியின் வெளிப்படுத்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும் டொக்,டொக்குன்னு பெட்டி தட்டும் ஒத்தை ஆளு விளையாட்டை விட ரிமோட் விசையத் தட்டுனோமா ஒரு காட்சியப் பார்த்தோமா விளம்பரம் பிடிக்கலையா இன்னொரு அமுக்கு அடுத்த சேனலுக்கு கூடு விட்டு கூடு பாஞ்சோமான்னு வீட்டின் ஹாலில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களையும் கூட்டு சேர்ப்பதில் தொலைக்காட்சி வெற்றி பெற்று விடுகிறது.
இன்னும் சொல்லனுமுன்னு வந்த எண்ண அலை இப்போதைக்கு முற்றுப் பெறுகிறது.
Posted by
ராஜ நடராஜன்
at
7:20 PM
Links to this post
27
comments
Labels: தொலைக்காட்சி
Sunday, June 7, 2009
க.தங்கமணி பிரபு
சிந்தனி என்ற களத்தின் சொந்தக்காரர் க.தங்கமணி பிரபு வின் எழுத்துக்களை முன்பு பார்க்க கிடைக்கவில்லை.சிலரைக் கண்டவுடன் பிடித்துப் போவது போல் இவருடைய எழுத்துக்களை இன்று பார்வையிட்டவுடன் பிடித்துப் போயிற்று. இன்று அவரிட்ட வயசுப்பெண்ணின் இடுப்பு என்ற தலைப்பில் சொன்ன ஒரு கவிதையைப் பார்வையிடப் போய் மற்ற பேச்சு வழக்கின் எழுத்தின் கருத்துக்களில் மூழ்கிப் போய் நல்ல எழுத்துக்கள் ஏன் ஒளிந்து நிற்கின்றன என்ற ஆதங்கத்தில் எழுதிய இடுகை இது.
ஈழப் போரினை அலசும்,விமர்சிக்கும்,குறை சொல்லும் அத்தனை எழுத்துக்களிலும் வித்தியாசம் கொண்ட எழுத்து இவருடையது.கூடவே உணர்வு பூர்வமானதும்.மானுடம் என்ற அடிப்படையைத் தள்ளி விட்டு நவீனத்தின் பக்கங்களை மட்டுமே எழுதுவது என்பது இயல்பாகிப் போன விசயமாகி விடுகிறது சிலருக்கு.அவர்களில் இருந்து தனித்து நிற்கும் எழுத்துக்கு ஊக்கம் தரும் வண்ணம் சிந்தனிப் பதிவர் க.தங்கமணி பிரபுவின் எழுத்துக்கள் இங்கே உங்களுக்கு அறிமுகம்.
எனக்கு இவரின் முன் அறிமுகம் கிடையாது.படித்த இந்த கணத்தில் குறிப்பிட வேண்டும் என்று மனதுக்கு தோன்றியதால் அவரின் இடுகையில் ஒன்று கீழே.
http://chinthani.blogspot.com/2009/06/blog-post.html
மிச்சம் மீதியும் உங்களுக்குப் பிடித்துப் போகும் என நினைக்கிறேன்.
வாங்க தங்கமணி!நீங்களும் வந்து ஜோதில ஐக்கியமாயிடுங்க:)
Posted by
ராஜ நடராஜன்
at
2:42 PM
Links to this post
12
comments
Labels: அறிமுகம்


